Saturday, April 7, 2012

ஏப்ரல் 6, 2012

துன்பங்களில் வாடும் குடும்பங்களுக்கு சிலுவையில்
அறையுண்ட இயேசு உதவி செய்கிறார் - திருத்தந்தை

   புனித வெள்ளியன்று இரவு உரோம் நகரின் கொலோசியம் திறந்த வெளியரங்கில் நடைபெற்ற சிலுவைப்பாதையை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் முன்னின்று நடத்தினார். குடும்பங்கள் என்ற மையப் பொருளில் அமைந்த இவ்வாண்டின் சிலுவைப்பாதை சிந்தனைகளை முதல் முறையாக, 'புதிய குடும்பங் கள்' என்ற இயக்கத்தை தோற்றுவித்த டானிலோ சான்சூச்சி - அன்னா மரியா என்ற இத்தாலியத் தம்பதியர் உருவாக்கியிருந்தனர். சிலுவைப்பாதை யின் இறுதியில் திருத்தந்தை பின்வருமாறு உரை வழங்கினார்.
   பிரச்சனைகளையும், துன்பங்களையும் சந்திக்கும் குடும்பங்களுக்கு சிலுவையில் அறையுண்ட இயேசு உதவி செய்கிறார். உறவுகளில் உருவாகும் முறிவுகள், குழந் தைகளின் எதிர்காலம் குறித்த கவலை, குடும்பங்களில் நோயுற்றோர் என்ற பல கவலைகளில் சூழப்படும் குடும்பங்கள், கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரச் சரிவு, நிலையான பணி வாய்ப்புகள் இல்லாத நிலை என்ற கூடுதல் பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றன. நம்மைச் சூழும் பிரச்சனைகளில் நாம் தனித்து விடப்படுவ தில்லை; மாறாக, சிலுவையில் அறையப்பட்ட இயேசு நம்முடன் துணையாக வரு கிறார். அவர் துன்பங்களைத் தாங்கிய விதம் நமக்கு மன உறுதியை அளிக்கிறது.