Wednesday, October 17, 2012

அக்டோபர் 17, 2012

நம்மைப் படைத்த இறைவனை அறியவும் அன்பு
செய்யவும் விசுவாசம் உதவுகிறது - திருத்தந்தை

   கடந்த ஞாயிறன்று திருச்சபையில் நம்பிக்கையின் ஆண்டைத் தொடங்கி வைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்றைய புதன் பொது மறைபோதகத் தில் நம்பிக்கை ஆண்டு குறித்த புதிய தொடர் ஒன் றைத் தொடங்கினார்.
   இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவோடு சிறப்பிக்கப்படும் நம்பிக்கை ஆண்டு குறித்த திருச்சபை கொண்டாட்டங்களுடன் இணங்கிச் செல்லும் விதமாக இன்றைய புதன் மறை போதகத்திலிருந்து, புதிய தொடர் ஒன்றை
த் தொடங் குகிறேன். இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம் என்னும் கொடையில் புதுப்பிக்கப் பட்ட ஆர்வம் கொண்டிருக்க இந்த நம்பிக்கையின் ஆண்டு நமக்கு அழைப்பு விடுக்கி றது. இறைமகன் இயேசு கிறிஸ்து, நம் இவ்வுலக வாழ்வின் இறுதி இலக்கை நமக்குக் காட்டுகிறார். விசுவாசம் நம் வாழ்வை மாற்றி அமைக்கிறது, நம்மைப் படைத்த இறை வனை அறியவும் அன்பு செய்யவும் உதவுகிறது. அவரின் விருப்பத்திற்கு இயைந்த வகையில் சுதந்திரமாக வாழவும், உண்மையான மனிதாபிமான மற்றும் சகோதரத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் ஒத்துழைக்கவும் அந்த விசுவாசம் உதவுகிறது. நம் இந்தப் புதன் மறைபோதகத் தொடர், அப்போஸ்தலிக்க விசுவாச அறிக்கையின் வார்த் தைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விசுவாசத்தின் மைய உண்மைகளைக் குறித்து எடுத்துரைப்பதாக இருக்கும். இயேசுவின் மறையுண்மைகள் பற்றிய முழு அறிவை நோக்கிச் செல்லவும், இயேசுவின் உடலாம் திருச்சபையின் வாழ்வில் ஆழமாகப் பங்குகொள்வதற்கும் இந்த நம்பிக்கையின் ஆண்டு அனைத்து விசுவாசிகளையும் வழி நடத்திச் செல்வதாக!
   இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆஸ்தி ரேலியாவிலிருந்து வந்திருந்த இசுலாமிய - கத்தோலிக்க கல்விக் குழு மற்றும் வட அமெரிக்க யூதக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் திருப்பயணிகளையும் வாழ்த்தி அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.