Monday, October 17, 2011

அக்டோபர் 16, 2011

விசுவாசத்தின் ஆண்டை அறிவித்திருக்கிறார் திருத்தந்தை

   இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கி யதன் 50ஆம் ஆண்டை முன்னிட்டு விசுவாசத்தின் ஆண்டை அறிவித்திருக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   புதிய நற்செய்தி அறிவிப்பாளர்களுக்கென்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இஞ்ஞாயிறு காலை திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய மறையுரையில் திருத்தந்தை விசுவாச ஆண்டை அறிவித்தார். இந்த ஆண்டானது, 2012 அக்டோபர் 11ந்தேதி தொடங்கி கிறிஸ்து அரசர் பெருவிழா வாகிய 2013 நவம்பர் 24 அன்று நிறைவடையும்.
   முழுமையாக மனம் மாறிக் கடவுளிடம் தன்னை அர்ப்பணிக்கும் திருஅருளின் மற்றும் அர்ப்பணத்தின் காலமாகவும், அவரில் நம் விசுவாசத்தை உறுதிப்படுத்தி மகிழ்ச்சியோடு அவரை அறிவிக்கும் காலமாகவும் மனிதரைப் பாலைவன வாழ்வி லிருந்து வெளியே கொணருவதற்கு அகில உலகத் திருச்சபையின் பணிக்கு புதிய உந்துதலைக் கொடுப்பதாகவும் இவ்வாண்டு இருக்கும் எனக் கூறினார் திருத்தந்தை.
   மேலும், ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் நாற்பதாயிரம் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இந்த விசுவாச ஆண்டு குறித்தத் திட்டங்களை விளக்கினார். திருச்சபையின் பணியானது கிறிஸ்துவைப் போன்று கடவுளின் இறையாட்சியை நினைவுகூர்ந்து கடவுள் பற்றிப் பேசுவதாகும், குறிப்பாக தங்களது தனித்துவத்தை இழந்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கு கடவுள் பற்றி எடுத்துரைப்பதாகும் என்றும் அவர் கூறினார்.
   தனது அப்போஸ்தலிக்கக் கடிதத்தின் மூலமும் இந்த விசுவாசத்தின் ஆண்டு பற்றி விளக்கியுள்ள திருத்தந்தை, கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 20ம் ஆண்டு அக்டோபரில் நிறைவடைவதால் இந்த விசுவாச ஆண்டு அக்டோபரில் தொடங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டை மதிப்பும் பயனும் நிறைந்த விதமாகக் கொண்டாட வேண்டுமென்று சகோதர ஆயர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும், விசுவாசம் பற்றிய அறிவைப் பெறுவதற்கு விசுவாசம் பற்றியத் தெளிவான அறிவைப் பெறுவதற்கு விலை மதிப்பில்லா மற்றும் இன்றியமையாத கருவி கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.